Over 10 years we helping companies reach their financial and branding goals. Onum is a values-driven SEO agency dedicated.

LATEST NEWS
CONTACTS

ம. திலகபாமா
மாநில பொருளாளர், பாட்டாளி மக்கள் கட்சி

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியாரின் வரிகளை மெய்யாக்குவது போல் அரசியலிலும், தமிழ் இலக்கியத்திலும் தனிப்பெரும் இடம் பெற்றுள்ளார் திலகபாமா.

பெண்ணியம் - விடுதலை

இலக்கிய பங்களிப்பு

திலகபாமா பெண்ணியக் கருத்துக்களையும் சமூகக் கருத்துக்களையும் உரத்தகுரலில் வெளிப்படுத்தும் கவிதைகளையும் கதைகளையும் எழுதிவருகிறார்.

தமிழ் இலக்கியச் சூழலில் 10 கவிதைத் தொகுப்புகளும், 2 நாவல்களும், 3 சிறுகதைத் தொகுப்புகளும், 2 கட்டுரை நூல்களும், மேலும், தமிழின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகளான சௌந்தரபாண்டியனார், பொன்னம்மாள் அவர்களுடைய வாழ்வியல் சரிதத்தையும் எழுதியிருக்கிறார்.

மக்களுக்கான போராட்டங்கள்

  • 2017ம் ஆண்டு மே-5 ம் தேதி சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே அமைக்கப்பட்ட பாருடன் கூடிய டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் எழுச்சியால் பெண்கள் மதுக்கடையை அடித்து, உடைத்து தீயிட்டு கொளுத்தினர்.
  • 2020ல் திருச்சியில் காவிரி நீரின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பக்கோரி பாமக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும் திரளான விவசாயிகளையும், மக்களையும் ஒன்று திரட்டினார்.
  • கடந்த ஆண்டு வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.
  • 2022ம் ஆண்டு விருதுநகரில் 22 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி 200 பெண்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
  • 2023ம் ஆண்டு கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி பகுதி மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

திலகபாமாவின் பங்களிப்பு

  • 2023ல் மதுரையில் பாமக சார்பில் மாபெரும் பெண்கள் சமூக நீதி கருத்தரங்கு நடந்தது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, நிறுவன தலைவர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றனர். தனது ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி காட்டினார்.
  • தென்மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் வகையில் சிவகாசி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
  • திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான பொன்னகரம், தாமரைப்பாடி, அனுமந்தநகர், கொத்தம்பட்டி, வேடப்பட்டி, சிறுமலைபிரிவு, நல்லாம்பட்டி, ம.மூ.கோவிலூர் பிரிவு, தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாமக கொடியேற்று விழாவை நடத்தியுள்ளார்.
  • தன்னைப் போலவே ஏராளமான பெண்களை பாமகவில் இணைக்கும் நோக்கத்துடன் மகளிர் சங்க நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
  • 2018ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கிராமிய சபையில் கிராமப்புற பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து உரையாற்றியுள்ளார்.
  • ஆத்தூர் மாவட்டம் கொழிச்சாமலை கிராமத்தில் வசிக்கும் 5 பழங்குடியின மக்களுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனது மதி ரத்த மையம் சார்பில் குருதிக்கொடை விழாவை நடத்தியுள்ளார்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கந்து வட்டி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேர்தல் வரலாறு

  • 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. அப்போது சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திலகபாமா போட்டியிட்டார்.
  • 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் களமிறக்கப்பட்டார்.